search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உற்சாக வரவேற்பு"

    • 'முத்தமிழ்த்தேர்' பயணிக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 100 மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
    • நகராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முத்தூர்:

    கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் எழுத்தாளர்-கலைஞர் குழு சார்பில் 'முத்தமிழ்த்தேர்' அலங்கார ஊர்தி பயணம் கடந்த 4-ம்தேதி முதல் வருகிற டிசம்பர் 5-ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 29 மாவட்டங்களில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    'முத்தமிழ்த்தேர்' பயணிக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 100 மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி புகழுக்கு புகழ் சேர்க்கும் வகையில், இன்றைய இளம் தலைமுறையினருக்கு கருணாநிதி பன்முகத் தன்மையினை எடுத்துச் செல்லும் வகையில், "எழுத்தாளர் கலைஞர் குழுவின்" மூலம் தயார் செய்யப்பட்ட, அவரது புகழ்பாடும் "முத்தமிழ்த்தேர் - அலங்கார ஊர்தி", நேற்று காங்கயம் பஸ் நிலையத்திற்கு வருகை புரிந்தது.

    அப்போது காங்கயம் தி.மு.க. நகர செயலாளர் வசந்தம் சேமலையப்பன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் காங்கயம் தாசில்தார் மயில்சாமி, நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ், காங்கயம் நகராட்சி ஆணையர் கனிராஜ், வெள்ளகோவில் நகர செயலாளர் சபரிமுருகானந்தன், ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், காங்கயம் நகர துணைச் செயலாளர் சுப்பிரமணி, நகராட்சி துணைத் தலைவர் கமலவேணி ரத்தினகுமார், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி நேற்று இரவு காங்கயத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று காலை ஈரோடு செல்கிறது.

    • வந்தேபாரத் ரெயிலுக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
    • விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பவித்ரா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    விருதுநகர்

    இந்திய ரெயில்வேயில் அதிவேகம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய 9 வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    அந்த வகையில் தென் மாவட்ட மக்களின் அதிக எதிர்பார்ப்பாக இருந்த இந்த ரெயில் நேற்று நெல் லையில் இருந்து சென் னைக்கு புறப்பட்டது.

    நேற்று மதியம் 12.30 மணியளவில் நெல்லையில் இருந்து புறப்பட்ட இந்த ரெயில் விருதுநகர் ரெயில் நிலையத்திற்கு மதியம் 2.18 மணிக்கு வந்தது. இந்த ரெயிலில் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை மந்திரி எல்.முருகன், மாநில பா.ஜ.க. துணைத் தலைவர் நயினார் நாகேந்தி ரன் எம்.எல்.ஏ., துரை கோட்ட ரெயில்வே ேமலா ளர் ஆனந்த பத்மநாபன் உள்ளிட்ட அதிகாரிகளும் வந்தனர்.

    வந்தேபாரத் ரெயில் விருதுநகர் ரெயில் நிலையத் தில் நுழைந்தவுடன் அங்கு கூடியிருந்த பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்களும் கைதட்டி ரெயிலை வர வேற்றனர்.

    இதனை தொடர்ந்து விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டு ரெங்கன் ரெயிலில் வந்த கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன், மத்திய இணை மந் திரி எல்.முருகன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட கட்சி பிரமுகர்க ளுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த வர வேற்பு நிகழ்ச்சியில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். அதே போல ரெயில் நிலைய அதிகாரி கண்ணன், வணிக ஆய்வாளர் கோவிந்தராஜ், போக்குவரத்து ஆய்வாளர் மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    வந்தே பாரத் ரெயில் வருகையை முன்னிட்டு விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பவித்ரா தலைமையில் ரெயில்வே போலீசாரும், பாதுகாப்பு படையினரும் ரெயில் நிலையத்தில் பாது காப்பு ஏற்பாடுகளை செய் திருந்தனர்.

    • மதுரை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்பத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • வழியெங்கும் சாலையின் இருபுறமும் அ.தி.மு.க. தொண்டர்கள் நின்று எடப்பாடியார் வாழ்க என கோஷமிட்டனர்.

    மதுரை

    அ.தி.மு.க. பொதுச் செய லாளராக எடப்பாடி பழனி சாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர் மதுரையில் தமிழ் நாடே திரும்பிப்பார்க்கும் வகையில் பிரமாண்ட பொன்விழா எழுச்சி மாநாடு கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான முன் னேற்பாடு பணிகளை பார் வையிடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி வருகை தந்து பணிகளை முடுக்கி விட்டார்.

    அனைத்து மாவட்டங்க–ளில் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் வந்து மாநாட்டில் பங்கேற்று விட்டு, பத்திரமாக ஊர் திரும்பும் வகையில் மேற்கொள்ளப் பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோச னைக ளை யும் அவர் வழங்கினார்.

    25 ஆண்டுகளுக்கு பிறகு அ.தி.மு.க.வில் மாநில மாநாடு நடைபெறுவதால் கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகள், இளைஞர்கள் என லட்சக்கணக்கானோர் மாநாட்டில் திரண்டுள்ளனர்.

    மதுரையில் நடைபெறும் இந்த மாநாட்டிற்காக சேலத்தில் இருந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் இருந்து காரில் மதுரை வருகை தந்தார். அவருக்கு கப்பலூர் தியாக ராஜர் மில் அருகே மதுரை மாநகர், மதுரை புறநகர், மதுரை கிழக்கு ஆகிய மாவட்ட கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மாவட்ட கழகச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகி–யோர் பூங்கொத்து கொடுத்து தொண்டர்கள் புடைசூழ எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து பெண்கள் பூரண கும்ப மரியா தை கொடுத்தும், பல்வேறு கோவில்களில் இருந்து பிரசாதங்கள் சிவாச் சாரியார் வழங்கியும் வர வேற்றனர். தொடர்ந்து மேள தாளங்கள், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வழியெங்கும் சாலையின் இருபுறமும் அ.தி.மு.க. தொண்டர்கள் நின்று எடப்பாடியார் வாழ்க என கோஷமிட்டனர். அதனை ஏற்றுக்கொண்ட அவர் இரட்டை விரலை காண்பித் தபடி சென்றார். மாநாடு திடலை கடக்கும்போது ஏராளமான தொண்டர்கள் விண்ணதிர கோஷம் எழுப் பினர். பின்னர் அவர் ரிங் ரோடு அருகே உள்ள தனியார் ஓட்டலில் இரவில் தங்கினார். இன்று காலை மாநாட்டில் கலந்து கொண்டார்.

    • ராமநாதபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • திருப்புல்லானி ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதில் திருப்புல்லானி ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திர மாலா, துணைத்தலைவர் தாஹிராபீவி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் காளீஸ்வரி, தினேஷ்குமார், செல்வி, ரவிச்சந்திரன், நாகராஜ், திருப்புல்லானி ஊராட்சி ஒன்றிய தலைவர் புல்லாணி, துணை தலைவர் சிவலிங்கம், ஒன்றிய உறுப்பினர்கள் சரளாதேவி, ரஞ்சனி, பிரேமா, முனியாயி, சுமதி, நாகநாதன், பைரோஸ்கான், கமலா, கலாராணி, கோவிந்த மூர்த்தி, கருத்த முத்து, திருமுருகன், கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, துணை தலைவர் ஹமீது சுல்தான், ரெகுநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கோபால கிருஷ்ணன், துணை தலைவர் ஜெகத் ரட்சகன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஆதித்தன், ஒன்றிய கவுன்சிலர் நாக நாதன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கண்ண ப்பன், கவிதா, சிவகாமி, கர்ண பூபதி, கமாலியா பேகம், மணிமேகலை, சாமிநாதன், திலீப்குமார், பெரிய பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான்பீவி, துணை தலைவர் பிரோஸ்கான், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சண்முகப்ரியா ராஜேஷ்குமார், துணை தலைவர் கண்ணகி ஜெகதீசன், தேரிருவேலி ஊராட்சி மன்ற தலைவர் அபுபக்கர் சித்திக், துணை தலைவர் கலாதேவி சேதுராமு, வார்டு உறுப் பினர்கள் மேக வர்ணம், மருதுபாண்டியன், முத்துச்சாமி, ஞானசவுந்தரி, ராமர் செல்வி, கீதா, முருகேசன், சாந்தி, நரிப்பையூர் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், துணை தலைவர் சண்முகராஜா, வார்டு உறுப்பினர்கள் பெருமாள், வள்ளி, சித்ரா தேவி, மல்லிகா, கார்த்திகா, சாந்தி, சிங்கராஜா, லெபன், தமிழரசன், அஸ்மா பேகம், செல்வராஜ்,

    முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் ஷாஜகான், துணை தலைவர் வயணப் பெருமாள், வார்டு உறுப்பினர்கள் பார்வதி, மாரியம்மாள், மீனாள், கருப்பணன், மோகன் தாஸ், நாகூர் மீரா, பாலுச்சாமி, சேகர், தனலட்சுமி, யுவ பிரியா, உம்முதர்தா, ஹிதா யத்துல் பானு, சுந்தரம்மாள், கொத்தங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், துணைத் தலைவர் வெங்கட சாமி, வார்டு உறுப்பினர்கள் பார்வதி, மும்தாஜ் பேகம், முத்துச்சாமி, கார்த்திக் ராஜா, ராஜா மேகலா, இந்திரா, மங்களேஸ்வரி, சுந்தரம்,

    இதம்பாடல் ஊராட்சி மன்ற தலைவர் மங்கலசாமி, துணை தலைவர் தெய்வக்கனி, வார்டு உறுப்பினர்கள் கவுதமன், கனகசபாபதி, கவிதா, தங்கராஜ், மோகன்தாஸ், ஜரினா பீவி, சுலைகா பேகம், முனீஸ்வரி, அச்சுந்தன் வயல் ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா லிங்கம், துணை தலைவர் மரகதம், ஊராட்சி உறுப்பினர்கள் சித்ரா, ஜெயசித்ரா தேவி, இந்துமதி, அர்ஜூனன், சேதுமணி, காக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயச்சந்திரன் (சகோ) ஜெயமணி, வார்டு உறுப்பினர்கள் சிவகுருநாதன், பெனாசீர் தான், மகமத் பேகம், ஒச்சம்மை, குணபாலன், தாய்லட்சுமி, சாந்தி, மரிய செல்வம், ஜெயமுருகன், குமாரக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில், துணை தலைவர் விஜயநாதன், வார்டு உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, ஜெ.ராஜேஸ்வரி, நாகஜோதி, காந்தியம்மாள், கிருஷ்ணன், சக்கரக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் யாழினி புஷ்பவல்லி, துணை தலைவர் ராமலட்சுமி, வார்டு உறுப்பினர்கள் முத்துமாரி, அரியநாயகம், நல்ல தம்பி, கணேசன், தர்ம வள்ளி, பாஸ்கர சேதுபதி, கோமதி, முத்துலட்சுமி, முத்துக்குமார், மஞ்சுளா, பாத்திமுத்து, சீனி செய்யதம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டு வரவேற்றனர்.

    எடப்பாடி பழனிசாமிக்கு கவுந்தப்பாடி நால்ரோடு சந்திப்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    பெருந்துறை, ஏப். 25-

    கோபிசெட்டிபாளையம் வருகை தந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அ மைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு கவுந்தப்பாடி நால்ரோடு சந்திப்பில்

    முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாள ருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ., மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழு உறுப்பினருமான ஜெயக்குமார் எம்.எல்.ஏ.,

    பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி கே.செல்வ ராஜ் மற்றும் அ.தி.மு.க முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் தலைமையில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    • நாளை மதுரை வரும் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும்.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    விருதுநகர்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு 2-ம் கட்டமாக ஊக்கத்தொகை வழங்கும் புதுமைப்பெண் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி உயர்கல்வி உறுதி திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது 993 கல்லூரி மாணவிகளுக்கு தலா ரூ.1000 ஊக்கத்தொகையுடன், வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம், நிதிக்கல்வி புத்தகம் அடங்கிய "புதுமைப்பெண்" பெட்டகப்பை மற்றும் வங்கி ஏ.டி.எம்.களை வழங்கினார்.

    கலெக்டர் ஜெயசீலன் பேசுகையில், இந்தியா விலேயே தமிழகத்தில் தான் உயர்கல்விக்கு செல்லும் பெண்களின் மொத்த சேர்க்கை விகிதம் 51 சதவீதமாக உள்ளது. உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் பெண்க ளுக்கான தொழில் வாய்ப்பு களை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல், அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்தல் ஆகி யவை நோக்கமாகும் என்றார். இதில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க மதுரை வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும்.
    • இதுகுறித்து மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, தளபதி, மணிமாறன் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    மதுரை

    மதுரை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ., மணிமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மதுரையில் வருகிற 6-ந்தேதி தி.மு.க. சார்பில் பாண்டி கோவில் ரிங் ரோட்டில் உள்ள கலைஞர் திடலில் 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறு கிறது.

    இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இந்த விழாவுக்காகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு விமானம் மூலம் மதுரை வருகிறார்.

    அவருக்கு மதுரை வடக்கு, மாநகர், மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது.

    எனவே இதில் இந்நாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளு மன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகி கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பல்வேறு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இருசக்கர வாகனங்களில் அணிவகுத்து சென்றனர்
    • உதயநிதி ஸ்டா லின் எம்.எல்.ஏ. விற்கு கட்சி நிர்வாகிகள் பொன்னாடை வழங்கினார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம். எல்.ஏ. சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடி வந்தார்.

    நேற்று இரவு அங்கு தங்கிய அவர் இன்று காலை காரில் புறப்பட்டு குமரி மாவட்டம் வந்தார். உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுக்கு குமரி மாவட்ட எல்லையான காவல்கிணற்றில் கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அமைச்சர் மனோ தங்கராஜ் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வை வரவேற்றார்.

    கிழக்கு மாவட்ட செயலா ளரும், நாகர்கோவில் மாநக ராட்சி மேயருமான மகேஷ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது உதயநிதி ஸ்டா லின் எம்.எல்.ஏ. விற்கு கட்சி நிர்வாகிகள் பொன்னாடை வழங்கினார்கள்.

    இதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வை தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்று கன்னியாகுமரிக்கு அழைத்து வந்தனர். இரு சக்கர வாக னத்தில் நிர்வாகிகள் முன் செல்ல உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. அழைத்து வரப்பட்டார்.

    20 கிலோ மீட்டர் தூரத்திற்கு அவரை தி.மு.க. நிர்வாகிகள் இருசக்கர வாகனங்களில் எழுச்சிமிகு வரவேற்புடன் அழைத்து வந்தது பொதுமக்களை மிகவும் கவர்ந்தது. வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், மாவட்ட பொருளாளர் கேட்சன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, சதாசிவம், துணைச்செயலாளர் பூதலிங்கம், மாநகரச் செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் பாபு, சுரேந்திர குமார்.

    இளைஞர் அணி துணை அமைப்பாளர் எட்பெர்க், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஜெகன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் சிவ பெருமான், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணை தலைவர் இ.என். சங்கர், நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர்,மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்கராஜா, சுப்பிரமணியம்,அமல செல்வன், கன்னியாகுமரி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், குமரி மாவட்ட தலைவர் டேவிட்சன், முன்னாள் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நசரேத் பசிலியான், ஸ்டாலின் பிரகாஷ், குமரி கிழக்கு மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் சுஜின் ஜெகேஷ், குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர், நகர செயலாளர் நாகூர்கான், மணவாளக்குறிச்சி தி.மு.க. பேரூர் செயலாளர் பாம்பே கண்ணன், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட பொருளாளர் ஜூடுசேம், குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாண்லீபன், திருவட்டாா ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. முன்னாள் துணை செயலாளர் ஐ.ஜி.பி. ஜாண்கிறிஸ்டோபர், மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் பிரிட்டோசேம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க மதுரை வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • 1000-த்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் தி.மு.க. கொடியுடன் வரவேற்பு அளித்தனர்.

    அவனியாபுரம்

    முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜையையொட்டி பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக சேலத்தில் இருந்து தனி விமானம் மூலம் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் மதுரை வந்தார். விமான நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர்கள் பி.மூர்த்தி, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, ராஜ கண்ணப்பன், பெரிய கருப்பன், தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, சோழவந்தான் வெங்கடேசன், மாவட்ட செயலாளர் மணிமாறன், இளைஞரணி ராஜா, மாணவரணி மருதுபாண்டி, அதலை செந்தில்குமார், போஸ், முத்தையா, ஈஸ்வரன், சசிகுமார், வேட்டையன், விமல், ரோகினி, பொம்மதேவன் உள்பட 1000-த்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் தி.மு.க. கொடியுடன் வரவேற்பு அளித்தனர்.

    தையொட்டி விமான நிலையத்தில் துணை ஆணையாளர் பெருமாள் ராமானுஜம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • எடப்பாடி பழனிச்சாமிக்கு அ.தி.மு.க. தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.
    • மலர் கொத்துக்களை கொடுத்தும் சால்வைகள் அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அவினாசி

    திருப்பூர் மாவட்டம் அவினாசிக்கு வருகை வந்த முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி., வேலுமணி மற்றும் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி .ஆர். ஜி .அருண்குமார் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அ.தி.மு.க. தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.

    இதில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே.செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மலர் கொத்துக்களை கொடுத்தும் சால்வைகள் அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். வழிநெடுக மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மங்கலத்தில் முன்னாள் அமைச்சரும் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை ராதாகிருஷ்ணன், பல்லடம் சட்டமன்ற உறுப்பினருமான எம். எஸ் .எம் .ஆனந்தன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.  

    • தி.மு.க.கிழக்கு மாவட்டம், திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் தலைமையில் ஏராளமானோர் பஸ்கள் மூலமாக புறப்பட்டு சென்றனர்.

    மங்கலம் :

    தமிழக முதலமைச்சர் மு.௧.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி,நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    முன்னதாக நேற்று அவர் கோவை மாவட்டம்,பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அங்கிருந்து காரில் இரவு திருப்பூர் வந்தார். அப்போது திருப்பூர் மாவட்டம்,பல்லடம்-வடுகபாளையத்தில் தி.மு.க.கிழக்கு மாவட்டம்,திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பங்கேற்க மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமையில் ஏராளமானோர் மங்கலத்தில் இருந்து பஸ்கள் மூலமாக புறப்பட்டுச் சென்றனர்.இதில் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் மு.சகாபுதீன், மாவட்ட பிரதிநிதிகள் ரவிச்சந்திரன்,சுந்தரவடிவேல், திருப்பூர் தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர்கள் இடுவாய் ரவி, பாபு ,நூர்முகமது , திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் முகமது ஜீனைத், சசி, திருப்பூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சரவணகுமார், முகமது உசேன், திருப்பூர் வடக்கு மாவட்ட மாணவரணியை சேர்ந்தவரும் ,மங்கலம் ஊராட்சி மன்ற 9-வது வார்டு உறுப்பினருமான முகமது இத்ரீஸ், மற்றும் தி.மு.க. நிர்வாகிகளான இடுவாய் சுரேஷ், குமார், மயில்சாமி, ராமாத்தாள், திருமூர்த்தி உள்ளிட்ட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

    • கொங்கல்நகரம் கிராமத்தைச்சேர்ந்த நகுல்நந்தன் விளையாடிசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    • சொந்த கிராமத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    உடுமலை:

    மத்திய அரசு சார்பில், ஹரியானா மாநிலத்தில், தேசிய அளவில்இளைஞர்களுக்கான, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடந்தது.இதில் தமிழக வாலிபால் போட்டியில் தமிழக அணி இறுதிப்போட்டியில், ஹரியானா மாநில அணியை 3-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது.

    இதில் தமிழக அணிக்காககுடிமங்கலம் ஒன்றியம், கொங்கல்நகரம் கிராமத்தைச்சேர்ந்த நகுல்நந்தன் விளையாடிசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தமிழக அணிக்காக போட்டியில் பங்கேற்று திரும்பிய அவருக்கு சொந்த கிராமத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.கொங்கல்நகரம் ஊராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஊராட்சித்தலைவர் விஸ்வநாதன் மற்றும் பாசன சபை தலைவர் நாகராஜன் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று நகுல்நந்தனுக்கு பாராட்டு தெரிவித்தனர். கிராம பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து மகிழ்ந்தனர்.

    ×